Saturday 4th of May 2024 07:34:27 PM GMT

LANGUAGE - TAMIL
.
கோட்டா - சு.க. பேச்சு வெற்றி! - சுதந்திரக் கட்சி தெரிவிப்பு!

கோட்டா - சு.க. பேச்சு வெற்றி! - சுதந்திரக் கட்சி தெரிவிப்பு!


ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுடனான பேச்சு வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.

நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இந்தப் பேச்சு நடைபெற்றது.

இதில் சுதந்திரக் கட்சியின் தலைவரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட கட்சியின் முக்கியஸ்தர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது தம்மால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகளுக்கு ஜனாதிபதி சாதாகமான பதிலை வழங்கினார் என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

"அரசில் சுதந்திரக் கட்சி உறுப்பினருக்கு இடையூறுகள் இன்றி செயற்பாடுகளை முன்னெடுக்கக் கூடிய சூழலை உருவாக்குதல், தேர்தல் முறைமையில் மாற்றம் செய்தல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினோம். இதற்கு ஜனாதிபதி இணக்கம் வெளியிட்டார்" என்று அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மேலும் கூறினார்.


Category: செய்திகள், புதிது
Tags: கோத்தாபய ராஜபக்ஷ, இலங்கை



பிந்திய செய்திகள்

BABY NAMES

Lorem Ipsum is simply dummy text of the printing and typesetting industry.

READ MORE